பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்து  கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்திய அமைப்பினர் ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியா முழுவதிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியும்  டீசல் விலை 92  ரூபாயை  எட்டி உள்ளதால் அனைத்து பொருட்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. தொடர்ந்து மத்திய அரசின் தவறான கொள்கை முடிவால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்தும், அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் பெட்ரோல் டீசல் விலையை உயர்வை திரும்ப பெறக்கோரியும், நோய்தொற்று தடுப்பூசி மருந்துகளை தமிழகத்திற்கு அதிகம் வழங்க கோரி கம்யூனிஸ்ட் பார்ட்ரிய் ஆப் இந்திய அமைப்பினர் பெரியகுளம் வடகரை பகுதியில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தின் போது பெட்ரோல்டீசல் விலை உயர்வை திரும்ப பெறகோரி ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

Translate »
error: Content is protected !!