துபாயில் துறைமுகத்தில் திடீர் தீ விபத்து..!

உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான ஜெபல் அலி, துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த ஒரு கப்பலில் திடீரென தீப்பிடித்தது.

தீப்பிழம்புகள் ஒரு கோளத்தைப் போல பெரியதாக எரிய ஆரம்பித்தன. துறைமுகத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துபாயின் வானுயர்ந்த  கட்டிடங்களுக்குள் சுவர்களும் ஜன்னல்களும் அதிர்ந்ததால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

கப்பல் தீப்பிடித்த துறைமுகமும் அமெரிக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ள இடமாகும். விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றாலும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கப்பலில் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Translate »
error: Content is protected !!