கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

சோலையாறு (கோவை) 9, சின்னக்கல்லார் (கோவை) 7, வால்பாறை (கோவை) 6, சின்கோனா (கோவை) 5, ஏற்காடு (சேலம்) 4, பந்தலூர் (நீலகிரி) 3, சித்தார் (கன்னியாகுமரி) 2, பெரியாறு (தேனி), தளி (கிருஷ்ணகிரி) தலா 1

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்

25.07.2021: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

25.07.2021: முதல் 26.07.2021 வரை: தெற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

27.07.2021: முதல் 29.07.2021 வரை: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 – 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்

25.07.2021 முதல் 27.07.2021 வரை: தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்“என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!