கொடைக்கானல் மலை பகுதிகளில் தொடரும் காட்டு யானை அட்டகாசம்..!

கொடைக்கானல் மலை பகுதிகளில் தொடரும் காட்டு யானை அட்டகாசம். பல முறை கோரிக்கை விடுத்தும் வனத்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் புகார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவிடு,,பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது.

இங்கு வசிக்கும் மக்கள் விவசாயமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இங்கு அவரை , பலா ,வாழை ,காப்பி, உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது  தொடர்ந்து இந்த பகுதிகளில் விளைவிக்கப்பட்டுள்ள பயிர்களை யானைகள் சேதப்படுத்தியும் விவசாயிகளை அச்சுறுத்தியும் வருகிறது. 

விலை நிலங்களுக்குள் யானை வராமல் அமைக்கப்படும் வேலிகளையும் சேதப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனை  விரட்ட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் இது வரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Translate »
error: Content is protected !!