3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் தோல்வி..!

32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 23 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இன்று 8 வது நாளில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் சேபிள் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் தோல்வி அடைந்தார்.

அவர் 8: 18.12 நேரத்துடன் பந்தயத்தில் 7 வது இடத்தைப் பிடித்தார். கென்யாவின் ஆபிரகாம் கிபிவோட் முதல் இடத்தையும், எத்தியோப்பியாவின் வேல் கெட்நெட் இரண்டாவது இடத்தையும் வென்றன. அவர்களுடன், இத்தாலியைச் சேர்ந்த அகமது அப்துல்வாகித் 3 வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

Translate »
error: Content is protected !!