சிங்கப்பூர் ரயிலில் முகக்கவசம் அணியாததால் இங்கிலாந்துவாசிக்கு 6 வாரம் சிறை

கடந்த மே மாதம் இங்கிலாந்தைச் சேர்ந்த பெஞ்சமின் கிளைன் (40) சிங்கப்பூர் ரயிலில் பயணம் செய்யும் போது முககவசம் அணியாத நிலையில் சிக்கினார். மேலும் அவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. பின்னர் அவர் தன் மீதான சட்டவிரோத குற்றச்சாட்டை கைவிட்டு, தனது குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு திரும்புவதற்காக தனது பாஸ்போர்ட்டை திருப்பித் தருமாறு கேட்டார். இருப்பினும், முகக்கவசம் அணியத் தவறியது குற்றம் என நீதிமன்றம் , அவருக்கு ஆறு வார சிறை தண்டனை விதித்தது.

Translate »
error: Content is protected !!