தமிழகத்தில் 10 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் -உயர் கல்வித்துறையின் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய உயர் கல்வி அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றார்.

இது குறித்து தமிழக சட்டசபையில் பேசிய அமைச்சர் பொன்முடி, “திருச்சுழி, திருக்கோவிலூர், ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்காடு, தாளவாடி மற்றும் மானூரில் 10 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம் மற்றும் திருப்பூர் அரசு கலைக் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கப்படவுள்ளன”. என்றார்.

Translate »
error: Content is protected !!