சென்னை சென்ட்ரல்: சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கொரோனா பாதிப்புகளால் வழக்கமாக இயங்க வேண்டிய விரைவு ரெயில்கள், முழு அளவில் இயக்கப்படவில்லை. இருப்பினும், தேவையை கருத்தில் கொண்டு இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு வருகின்றன.

அதனால், சென்னைசென்ட்ரல்-கயா (02390/02389), பாருனி-எர்ணாகுளம் (02521/02522), பாடலிபுத்தூர்-யஸ்வந்த்பூர் (03251/03252), தர்பாங்கா-மைசூர் (02577/02578), முஜாபர்பூர்- யஸ்வந்த்பூர் (05228/05227) ஆகிய 10 சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரெயில்கள், மறு அறிவிப்பு வரும் வரை தற்போது இயக்கப்படும் அதே நேரத்தில், அதே வழித்தடத்தில் இயக்கப்படும். இவற்றுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!