வேளாண் சட்ட போராட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் அறிவிப்பு

சட்டசபையில் விவசாய மசோதாக்களுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக அரசு இன்று கொண்டு வந்தது. தீர்மானத்தின் போது அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு முழுவதும் அறவழியில் போராடிய விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்து திரும்பப் பெறப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!