ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடலுக்கு முதல்வர் முக.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி..!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 63.

பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சென்னை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்ப உள்ள நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக காலமானார்.

அவரின் மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைத்து கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் முக. ஸ்டாலின் பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மனைவியை இழந்து தவிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார்.

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், மா சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு சேகர் பாபு மற்றும் பலர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மனைவியை இழந்து தவிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார்.

இன்னும் சில மணி நேரத்தில் அவரின் உடல் மருத்துவமையில் இருந்து தி.நகரில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட உள்ளது. மேலும் அங்கிருந்து அவரின் சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!