தமிழகத்தின் 24 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. டிடிவி தினகரன் கண்டனம்

தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது குறித்து அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு,

பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கொரோனா பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில், அவர்கள் தலையில் அடுத்தடுத்த சுமையை ஏற்றுவது வேதனைக்குரியது. உடனடியாக சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!