கண்கலங்கிய ஓபிஎஸ்.. கையை பிடித்து ஆறுதல் சொன்ன சசிகலா..!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக துணை முதல்வருமான பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 63.

பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சென்னை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்ப உள்ள நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக காலமானார்.

அவரின் மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைத்து கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி உடலுக்கு சசிகலா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். கண்கலங்கிய ஓ.பன்னீர்செல்வத்தின் கையை பிடித்து ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அதிமுக கொடி கட்டிய காரில் மருத்துவமனை வந்த சசிகலா ஓபிஎஸ் கையைப்பிடித்து ஆறுதல் கூறினார்.

Translate »
error: Content is protected !!