கடலூர்: நெய்வேலியில் 2 ஆசியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால் வகுப்புகள் இதுவரை ஆன்லைன் மூலம் தான் நடத்தப்பட்டுவருகிறது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பள்ளிகளை திறந்து 3 நாட்கள் ஆனா நிலையில், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலைசெய்யும் இரண்டு ஆசியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களோடு தொடர்பில் இருந்த மற்ற ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!