அகவிலைப்படி உயர்வு.. ஜனவரி 1 முதல் அமல் – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டுவருகிறார்.

அதில் இன்று 110 வது விதியின் கீழ் முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும். அகவிலைப்படி அமல்படுத்துவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!