கொடைக்கானல் ஏரி சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நிரந்தரமாக காவலாளி நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் பிஎஸ்என்எல் அலுவலகம் அமைந்துள்ளது. கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளும் இருந்துவருகிறது.
தொடர்ந்து கொடைக்கானல் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இரண்டு நிரந்தரப் பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ஆனால் தற்போது இந்த பிஎஸ்என்எல் அலுவலக கட்டிடத்தில் காவலாளி இல்லாமல் இருந்து வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
காவலாளி நியமிக்கப்பட்டாலும் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது..