தமிழகத்தின் புதிய கவர்னருக்கு முதல்வர் வாழ்த்து

தமிழகத்தில் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியில் இருந்தார். அவருக்கு சமீபத்தில் பஞ்சாப் ஆளுநர் பதவியின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவர் பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,

தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்!

தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்!

தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது!

என்று பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!