மாணவச் செல்வங்களுக்கு முதலமைச்சர் அறிவுரை-முதலமைச்சர் டிவிட்

நீட் தேர்வை நினைத்து மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். ஈடில்லா உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாகவும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீட் தேர்வுக்கு அச்சமடைந்து தமிழகத்தில் கடந்த 4  நாட்களில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.  நீட் எனும் உயிர் கொல்லிக்கு மாணவர்கள் உயிரை மாய்த்து  கொள்ளும் சூழலில் இது தொடர்பாக டிவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாணவர்கள் தற்கொலை  முயற்சியில் ஈடுபடாமல்  மன  உறுதியோடு இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது  தன் நெஞ்சில்  ஈட்டியை பாய்ச்சுவது போன்று உள்ளதாக மு.க.ஸ்டாலின் உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு மீது சரமாரியாக குற்றம்சாட்டியுள்ள மு.க. ஸ்டாலின், நீட்டை  ஒழிக்கும் வரை தமிழக அரசின் சட்டப் போராட்டம் தொடரும் என உறுதி  அளித்திருக்கிறார்.  மாணவர்களுக்கு  பெற்றோர் அழுத்தம் தரக்கூடாது எனவும் மு.க.ஸ்டாலின்  அறிவுறுத்தி  உள்ளார்.

Translate »
error: Content is protected !!