கள்ளக்காதல் தகராறு: டிவி நடிகர் ஓட ஓட வெட்டிக்கொலை : 10 பேர் கும்பல் கைது

சென்னை எம்ஜிஆர் நகரில் கள்ளக்காதல் தகராறில் டிவி நடிகர் நடுரோட்டில் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்ஜிஆர் நகர், வள்ளல் பாரி தெருவைச் சேர்ந்தவர் செல்வரத்தினம். இலங்கை அகதியான இவர் விருதுநகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்துள்ளார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
சென்னை, எம்ஜிஆர் நகரில் தங்கியிருந்து தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை எம்ஜிஆர் நகர், வள்ளல் பாரி தெருவுக்கு ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் செல்வரத்தினத்தை செல்போனில் பேசி அவரை வீட்டிற்கு வெளியே அழைத்துள்ளனர். அவர் வெளியே வந்த போது அந்த கும்பல் திடீரென அரிவாளால் வெட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வரத்தினம் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் கொலை வெறியுடன் விரட்டிய வந்த கும்பல் செல்வரத்தினத்தை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் அவர் சரிந்தார். இந்த சம்பவம் தொடர்பாக எம்ஜிஆர் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விஜயகுமார் என்பவரை கைது செய்தனர். விஜயகுமாரின் மனைவி

டயனாவுடன் செல்வரத்தினத்துக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அதனை பலமுறை கண்டித்தும் செல்வரத்தினம் கைவிட மறுத்ததால் அவரை கொலை செய்ததாக விஜயகுமார் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அவருடன் அவரது கூட்டாளிகள் 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!