கறிக்கடை தகராறில் ஒருவர் அடித்து கொலை

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வாகம்புலி தெருவில் குடியிருந்து வரும் ஹக்கீம் மற்றும் ஜெய்லானி மகன் ஜாபர் ஆகியோர் தாமரைக்குளம் காலேஜ்விலக்கு பகுதியில் கறிகடை வைத்து நடத்தி வருகின்றார்கள். அதே பகுதியில் தாமரைகுளம் சுப்பிரமணியசிவா தெருவில் குடியிருந்து வரும் சையது முகமது என்பவருடைய மாமனாரும் கறி கடை வைத்து நடத்தி வருகின்றார்கள்.

 

சையது முகமது

இந்நிலையில் கறிக்கடை தொழில் போட்டி காரணமாக சையது முகமதுவின் மாமனாரை ஹக்கீம் மற்றும் ஜெய்லானி மகன் ஜாபர் ஆகியோர் கடுமையாக தாக்கியதாகவும், பின்பு சையது முகமது தனது மாமனாரை ஏன் தாக்கினீர்கள் என்று கேட்பதற்காக பெரியகுளம் தென்கரை வாகம்புளி தெருவிலுள்ள ஜெய்லானி மகன் ஜாபர் மற்றும் கறிக்கடை ஹக்கீம் ஆகியோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கறிக்கடை அக்கீம் மற்றும் ஜெய்லானி மகன் ஜாபர் ஆகீயோருடன் இருந்த இரண்டு நபர் உட்பட 4 பேர் கடுமையாக தாக்கியுள்ளார்கள்.

தாக்குதலுக்கு உள்ளான சையது முகம்மது பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் சையது முகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகராறில் ஈடுபட்ட சையதுமுகமது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இறிந்து தென்கரை காவல்துறையினர் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்துகுற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளார்கள்.

மேலும் உயிரிழந்த சையது முகமதுவின் உடலை பிரோத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் கொலைக்கு காணரமாணவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிலந்தவரின் உறவினர்கள் காவல்துறையினரிடம் முறையிட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!