பெரியகுளத்தில் நீர்வரத்து அதிகரிப்பு பொதுமக்கள் எச்சரிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பகல் மற்றும் இரவு சேரத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையின் காரணமாக  சோத்துப்பாறை அணை, கல்லாறு,  கும்பக்கரை, செலும்பாறு உள்ளிட்ட பகுதியில் இருந்து அதிக அளவில் நீர் வரத்து அதிகரிததால் பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வராக நதியில் அதிக அளவில்  நீர் செல்வதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் வராக நதி ஆற்றங்கரையோரம் உள்ள  வடுகபட்டி, மேல்மங்களம், ஜெயமங்களம், குள்ளப்புரம் ஆகிய கிராம மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்க வேண்டாம் என்று   பொதுப்பணித்துறையினர் தெரித்தான்ர். மேலும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என  பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்

Translate »
error: Content is protected !!