மழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர் வரத்து இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள மேற்கு தொடர்சி மலை பகுதியில் தென் மேற்கு பருவ மழை துவங்கியது முதல் போதிய மழை பொழிவு பெய்யாது போனதால் அருவிக்கு வரும் நீர் வரத்து குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்சி மலைப்பகுதி மற்றும் அருவியின் நீர் பிடிப்பு பகுதியில்  பெய்த கனமழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து துவங்கி அதிகரித்த நிலையில் நேற்று முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று பகல் மற்றும் இரவு நேரத்தில் கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள மேற்கு தொடர்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக இரண்டாம் நாளாக    கும்பக்கரை அருவியில் மேலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் கும்பக்கரை அருவிக்கு கீழ் உள்ள குளத்து பாசன விவசாயிகள் மகிழ்சி அடைந்துள்ளனர்.
Attachments area
Translate »
error: Content is protected !!