24 மணி நேரத்தில் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி- புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 15 நபர்களுக்கும், காரைக்காலில் 7 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபர்க்கும், மாஹேவில் 2 நபர்களுக்கும் என மொத்தம் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் புதுச்சேரியில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1867 ஆக உயர்ந்துள்ளது மற்றும் மாநிலத்தில் தற்போது 317 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,26,336 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும்  இதுவரை மொத்தம் 1,28,520 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவலளித்துள்ளது.

Translate »
error: Content is protected !!