வட இந்தியாவில் குளிர் அதிகரிக்கும்

அடுத்த இரண்டு நாட்களுக்கு வட இந்தியாவில் குளிர் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், பஞ்சாப், அரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு குளிர் மேலும்  அதிகரிக்கும் என்றும், அதே நேரத்தில் ஸ்ரீநகர், பகல்காம் மற்றும் குல்மார்க் ஆகிய இடங்களில் கடும் குளிர் நிலவும்  என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வறண்ட வடமேற்கு காற்று காரணமாக வட இந்தியாவின் பல இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இரவு நேரங்களில் வெப்பநிலை மேலும் குறையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!