திடீரென தீ பற்றி எறிந்த கார்.. 2 குழந்தை உட்பட 9 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்..

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், சக்திவேடு பகுதியில் உள்ள பெருவயல் கோவிலுக்கு கோவையில் இருந்து ஒரு குடும்பம் சென்றுள்ளனர். கார் சென்று கொண்டிருந்த போது இன்ஜினுக்கு அடியில் இருந்து புகை வருவதை பார்த்த டிரைவர் காரை விட்டு இறங்கி பார்த்துள்ளார்.

அப்போது திடீரென கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது அடுத்து காரில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் உடனே இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து கும்மிடிப்பூண்டி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!