இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பீம்பர் காலி பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய ராணுவம் நேற்று இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் பயங்கரவாதி நுழைந்ததை இந்திய ராணுவ வீரர்கள் கண்டனர்.

இதையடுத்து ராணுவ வீரர்கள் விரைந்து செயல்பட்டு இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தினர். கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!