ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என கேரள நல்வாழ்வுத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், ஒமிக்ரான் வகையை சேர்ந்த புதிய கொரோனா பாதிப்புகள், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் ஒன்றிய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சில நாடுகள் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய நிலையில் உள்ளன எனவும், இதனால் அதுபோன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளிடம் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்படும் எனவும், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.