ஓமிக்ரான் வைரஸ்- RTPCR சோதனை கட்டாயம்

 

ஓமிக்ரான் உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு RTPCR சோதனை கட்டாயம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகர் அரசு புறநகர் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆட்சியில் 220 கிலோ லிட்டர் அளவில் ஆக்சிஜன் கொள்கலன் இருந்தது எனவும், ஆனால், திமுக ஆட்சி அமைந்தவுடன் 744.67 கிலோ லிட்டர் கொள்கலன் கொண்ட அமைப்புகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார். ஓமிக்ரான் தொற்றை கண்டறிவதற்கான தெர்மோ டெக்பாத் போதுமான அளவு கையிருப்பில்  உள்ளது எனவும், ஓமிக்ரான் குறித்த யூகங்களே வருகிறது, இன்னும் அதன் பரவல், வேகம் குறித்த முழு தகவல் இல்லை எனத் தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!