முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்கப்படுமா..? – மத்திய அரசு விளக்கம்

தமிழகம் – கேரளா இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரளா கோரி வரும் நிலையில், மக்களவையில் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. இரு மாநிலங்களும் தொடர்ந்து ஒப்புதல் அளித்தால் புதிய அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!