இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் காலமானார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயின்ற அவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். மன நோயாளிகளின் சிகிச்சையில் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தனி முத்திரை படைத்த சாதனையாளர்.

அவர் சிறந்த மருந்துவர் மட்டுமல்லாது – சிறந்த நிர்வாகத் திறனும் படைத்தவர். சென்னையில் அவர் நிறுவி இயங்கி வரும் மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் SCARF) சொல்லத்தக்கதாகும். அவரது பங்களிப்புகளில் மிகவும் குறிப்பிட்டுச் அவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இதையடுத்து, அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சாரதா மேனன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் அவர்கள் உடல்நலக்குறைவால் தனது 98 வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்குள்ளானேன்” என தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!