சந்தையில் தவறவிட்ட மூன்று வயது குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த பெண்

நாமக்கல்லில் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் பெற்றோர், சந்தையில் தவறவிட்ட குழந்தையை பத்திரமாக மீட்ட பெண், போலீசார் முன்னிலையில் 3 வயது குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

வீடின்றி, மூன்று குழந்தைகளுடன் சாலையோரம் வசிக்கும் முஸ்தபா-தீபா தம்பதியினர், தங்களது 3வது குழந்தையான, 3 வயது பாலமுருகன் பள்ளிபாளையம் சந்தையில் தவறவிட்டுள்ளனர்.

பெற்றோர் பிரிந்து சென்று குழந்தை அழுவதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த மோகனா என்ற பெண், போலீசாருக்கு தகவல் அளித்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

குழந்தையின் புகைப்படம் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் காவல் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து பாலமுருகனின் பெற்றோர் காவல் நிலையம் வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், குழந்தையை பத்திரமாக வளர்க்க அறிவுறுத்தினர்.

Translate »
error: Content is protected !!