ஒமிக்ரான் பீதி – வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பிய பயணிகளை கண்டுபிடிக்க முடியவில்லை

 

ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் வெளிநாடுகளில் இருந்து மும்பை திரும்பிய 100க்கும் மேற்பட்ட பயணிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

ஒமிக்ரான் பரவலை தடுக்க சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் வீட்டிலேயே தங்களை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு பின் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி மும்பை விமான நிலையம் வந்த 295 வெளிநாட்டு பயணிகளில் 109 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களின் செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விமான நிலையத்தில் கொடுக்கபட்ட முகவரியில் சென்று பார்த்தபோது வீடு பூட்டி கிடப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!