நாமக்கல்: சாலை விபத்தில் செயலிழந்த கால்கள்.. அரசின் உதவிக்காக காத்திருக்கும் வாலிபர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே,. சாலை விபத்தில் முதுகெலும்பு உடைந்ததால் கால்கள் செயலிழந்த வாலிபர் அரசின் உதவிக்காக காத்திருக்கிறார்.

தொட்டியபட்டி கிராமத்தை சேர்த்தவர் சங்கர். இவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் இரண்டு கால்களும் செயலிழந்து நடக்கமுடியாத நிலையில் இருக்கிறார்.

இதனால், வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பதாகக் கூறும் சங்கர், கூலித் தொழிலால் பெற்றோர் வறுமையில் வாடுவதாகக் கண்ணீருடன் தெரிவிக்கிறார். இதனால் தமிழக அரசு மருத்துவ உதவி செய்து சுயதொழில் செய்ய உதவ வேண்டும் என சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!