அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூப்பர் மரிதாஸ் மீதான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை ராணுவ தலைமை தளபதி உயிரிழந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக 5 பிரிவுகளில் யூடியூப் மாரிதாஸை மதுரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாரிதாஸ் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாரிதாஸை ட்விட்டரில் 2 லட்சம் பேர் பின்தொடர்வதாகவும், மனுதாரர் மாரிதாஸ் நன்கு அறிந்தே இந்தக் கருத்தை பதிவு செய்ததாகவும் கூறி, அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மதுரை சைபர் கிரைம் போலீசார் ரத்து செய்வதாக அறிவித்தனர்.

Translate »
error: Content is protected !!