மும்பையில் 21 மாதங்களுக்குப் பிறகு 1-7 வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

மும்பையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 21 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்டு, எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும், ஆன்லைனில் கற்றுக்கொள்வதை விட பள்ளியில் நேரடியாகக் கற்றுக்கொள்வது சிறந்தது என்றும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

Translate »
error: Content is protected !!