17 வயதில் பிரசவத்திற்காக சிறுமி அனுமதி.. கணவர் கைது

சேலம் ஓமலூர் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், 17 வயது சிறுமி கர்ப்பமாக உள்ளார்.

இதையடுத்து, பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமிக்கு 16 வயதில் திருமணம் நடந்ததை அங்குள்ள டாக்டர்கள் கண்டுபிடித்து, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார், சிறுமியின் கணவர் தமிழ்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Translate »
error: Content is protected !!