குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Translate »
error: Content is protected !!