பாகிஸ்தான்: அதிகாலை பனியால் அடுத்தடுத்து மோதிய கார்கள் – 14 பேர் படுகாயம்.. 3 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரில் உள்ள பாபு சாபு வாகன சுங்க நிலையத்தில் இன்று அதிகாலை இரண்டு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

கடும் பனி காரணமாக வெளிச்சமின்மையால் மூன்று கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!