இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்படாது


கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்படாது என மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. புத்தாண்டு நெருங்கியுள்ள நிலையில், கர்நாடகாவில் மாநில அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கிற்கு உணவகம் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் தான் தங்களின் வியாபாரம் நன்றாக நடைபெறும் என்றும், இரவு நேர ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் எனவும் வேதனை தெரிவித்திருந்தனர். மேலும் இரவு நேர ஊரடங்கை வாபஸ் பெறுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கோாிக்கை விடுத்திருந்தனர். இதற்கு பதிலளித்த அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஒமைக்ரான் பரவலை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரியும் என குறிபிட்டுள்ள அவர், வைரஸ் பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால் இரவு நேர ஊரடங்கை வாபஸ் பெற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!