சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு மையங்கள் அமைக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு மையங்களை அமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் வரும் 3ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறார்களுக்கு மட்டும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இந்நிலையில், சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!