வருகைப் பதிவு செய்யும் முறை அறிமுகம்

மின்வாரியத்தில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் வருகைப் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, மின்வாரிய தலைமையகத்தில் சுமார் 12 இடங்களில் இந்த தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், இந்த தொழில்நுட்பம் மூலமும், வழக்கமான நடைமுறை என 2 வகைகளிலும் ஜனவரி 3ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு வருகைப் பதிவு மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் முதல் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் மட்டுமே வருகைப் பதிவு செய்யப்படும் என குறிப்பிட்டு அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவித்து, முக அடையாளத்தைப் பதிவு செய்ய அறிவுறுத்துமாறு தலைமை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!