குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கொரோனா விதிமுறை காரணமாக கடந்த 31.12.2021 முதல் நேற்று வரை குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே அருவிகளில் நீராடினர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றும், நேற்று முன்தினமும் மிதமான மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!