இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் சிறைக்காவல் நீட்டித்து உத்தரவு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரின் சிறை காவலை ஜனவரி 5ம் தேதி வரை நீட்டித்து மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 19ஆம் தேதி, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச்சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்துள்ளனர்.

மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மீனவர்களின் சிறை காவலை ஜனவரி 5ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Translate »
error: Content is protected !!