நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா

நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு அலுவலகங்கள், பொதுப்பணிகளில் ஈடுபடுவோருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாடாளுமன்ற ஊழியர்கள் ஆயிரத்து 409 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், 402 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களது மாதிரிகள் ஒமிக்ரான் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள உள்ள சூழலில், நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா பாதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!