நேதாஜி மக்கள் இயக்கம் சார்பில் பெரியகுளத்தில் ரத்ததான முகாம்

பெரியகுளத்தில், நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக, பெரியகுளத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில், ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்று ரத்தம் வழங்கினர்.

மேலும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு நேதாஜி மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பாக அனைவருக்கும் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மாநிலஇளைஞரணி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாவட்டஇளைஞரணி நகரம்,ஒன்றிம், உறுப்பினர்கள் அவர்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!