கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்க சினிமா பாடல்கள்

நாகை பாரதிதாசன் கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த சிகிச்சை மையத்தில் மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கவும், சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க சினிமா பாடல்களை ஒளிபரப்பவும் இந்த மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!