நடிகர் சித்தார்த்தின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த்தின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது நடந்த பாதுகாப்பு குளறுபடிக்கு கண்டனம் தெரிவித்து சாய்னா நேவாலின் ட்விட்டர் பதிவுக்கு, நடிகர் சித்தார்த் அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த்தின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழக டிஜிபி உத்தரவின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். புகாரின் விவரங்கள் ட்விட்டர் பதிவுகளை சட்ட வல்லுநர்கள் ஆய்வுக்கு அனுப்பியுள்ள போலீசார், அந்த பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!