தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்கு காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 28ம் தேதி மிதமான மழையும், 29 மற்றும் 30ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 28 மற்றும் 29ம் தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!