கொரோனாவால் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் காலமானார்

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும், மணிலால் காந்தியின் பேரனுமான சதீஷ் துபேலியா காலமானார். அவருக்கு வயது 66. தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகரில் அவர் வசித்து வந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு, நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் இருக்கும்போது அவரை கொரோனா வைரசும் தாக்கியது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. தனது பிறந்தநாள் முடிந்த 3 நாட்களில் அவர் இறந்துள்ளார்.
Translate »
error: Content is protected !!