ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி வழிபாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தர்மராஜா கோயில் கும்பாபிஷேக விழாவில்  ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி வழிபாடு செய்யப்பட்டது. கொத்தப்பள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கோபுரங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதனையொட்டி பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து, கோயிலின் கோபுர கலசங்கள் மீது மலர்கள் தூவப்பட்டன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

 

Translate »
error: Content is protected !!