கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

புதுச்சேரி மீனவர்கள் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடற்பகுதி சீற்றத்துடன் காணப்படுவதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. இதன் காரணமாக புதுச்சேரி கடற்பகுதி முழுவதும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனையடுத்து பெரும்பால மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் நாளை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பேரிடர் மேலாண்மை மையம் கண்காணிக்க புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!